×

இந்தியா- அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது; 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது இந்தியா

டப்ளின்: இந்தியா- அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டி20 போட்டி மழை காரணமாக ஒரு பந்து கூட வீசாத நிலையில் கைவிடப்பட்டது. இதையடுத்து 2-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது.

அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி நடைபெற்றது.

அந்த போட்டியில் ட்க்வொர்த் லீவிஸ் முறைப்படி இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 2வது டி20 போட்டி கடந்த 20ம் தேதி அதே டப்ளின் மைதானத்தில் நடைபெற்றது. அந்த போட்டியிலும் இந்திய அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வென்று தொடரை 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இந்நிலையில் சம்பிரதாய போட்டியான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி டப்ளினில் நேற்று இரவு நடைபெற இருந்தது. இந்நிலையில் போட்டி நடைபெறும் பகுதியில் தொடந்து மழை பெய்தது. சில மணி நேரமாகியும் மழை தொடர்ந்ததால் இந்த போட்டி ஒரு பந்து கூட வீசாத நிலையில் ரத்து செய்யப்பட்டது.

The post இந்தியா- அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது; 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது இந்தியா appeared first on Dinakaran.

Tags : 3rd T20 ,India ,Ireland ,Dublin ,Dinakaran ,
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!