×

வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது கே.வி.குப்பம் அருகே 3வது முறையாக

கே.வி.குப்பம், ஆக.24: கே.வி.குப்பம் அருகே 3வது முறையாக வாலிபர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கே.வி.குப்பம் அடுத்த லத்தேரி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சதீஷ்(32). இவர் கொலை முயற்சி, வழிப்பறி, திருட்டு, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு பலமுறை சிறைக்கு சென்றவர். மேலும், ஏற்கனவே 2 முறை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், சதீஷ் தொடர்ந்து பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதால் அவரை மீண்டும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்பி மணிவண்ணன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில், சதீஷை 3வது முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேற்று உத்தரவிட்டார். தொடர்ந்து, அதற்கான உத்தரவு நகல் சிறையில் உள்ள சதீஷிடம் வழங்கப்பட்டது.

The post வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது கே.வி.குப்பம் அருகே 3வது முறையாக appeared first on Dinakaran.

Tags : KV Kuppam ,Dinakaran ,
× RELATED இளம்பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது கே.வி.குப்பம் அருகே