×

வாலிபரை தாக்கிய 3 பேர் கைது

நெல்லை, ஆக.24: வள்ளியூர் நம்பியான்விளையைச் சேர்ந்தவர் சந்துரு (20). இவர் கோதைசேரியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரின் மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 22ம்தேதி சந்தோஷ், பணகுடி ராஜதுரை(24), இளையநயினார்குளம் விக்னேஷ் (19) உள்ளிட்ட 4பேர் நம்பியான்விளை பத்திரகாளியம்மன் கோயில் அருகே நின்ற சந்துருவை அவதூறாக பேசி கம்பால் தாக்கியும், அவரது நண்பரான நவீனை கத்தியால் வெட்டிவிட்டு மிரட்டி சென்றனர். இதுகுறித்து சந்துரு கொடுத்த புகாரின் பேரில் வள்ளியூர் எஸ்ஐ சகாய ராபின்சாலு வழக்கு பதிந்து விசாரணை நடத்தி சந்தோஷ், ராஜதுரை, விக்னேஷ் ஆகிய மூவரையும் கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.

The post வாலிபரை தாக்கிய 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Nellai ,Sanduru ,Valliyur Nambianvlai ,Santhosh ,Kothaisery ,
× RELATED நெல்லையில் அரசு பேருந்து ஓட்டுநர்,...