×

லாரி மீது கார் மோதி 3 பேர் படுகாயம்

வேடசந்தூர்: அய்யலூர் அருகே, லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலத்த காயமடைந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். திருப்பூரைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவர் தனது மனைவி பரமேஸ்வரி, மகன் சபரி, மகள் தேவி பாலா ஆகியோருடன் திருச்சி மாவட்டம், பொன்னம்பலப்பட்டிக்கு நேற்று காரில் சென்று கொண்டிருந்தார். காரை வெள்ளைச்சாமி ஓட்டினார். திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், அய்யலூர் அருகே, கடவூர் பிரிவில் சென்றபோது, முன்னாள் சென்ற சரக்கு லாரியின் பின்புறம் எதிர்பாராதவிதமாக கார் மோதியது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி நொறுங்கி சேதமடைந்தது. இதில் வெள்ளைச்சாமி, பரமேஸ்வரி, தேவிபாலா ஆகிய மூன்று பேரும் பலத்த காயமடைந்தனர். சபரி காயமின்றி தப்பினார். அக்கம்பக்கத்தினர் 3 பேரையும் மீட்டு, திண்டுக்கல் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் திண்டுக்கல்-திருச்சி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post லாரி மீது கார் மோதி 3 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Vedasandur ,Ayyalur ,Dinakaran ,
× RELATED அய்யலூர் பேரூராட்சியில்...