×

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் சுகாதார ஆய்வாளர்

கடலூர் மாவட்டம், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Health Inspector (On FTE Basics): 18 இடங்கள்.

சம்பளம்: ரூ.38,000. வயது: 30க்குள்.

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் நலவாழ்வு மற்றும் சுகாதாரம் பாடத்தில் டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். குறைந்தது 3 வருடம் சுகாதார ஆய்வாளர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள், நேர்முகத்தேர்வு, பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.

கட்டணம்: பொது/ பொருளாதார பிற்பட்டோர்/ ஒபிசியினருக்கு ரூ.486/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு ரூ.236/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். www.nlcindia.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: இன்று (23.08.2023).

The post நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் சுகாதார ஆய்வாளர் appeared first on Dinakaran.

Tags : Neyveli Coal Company ,Cuddalore District ,Dinakaran ,
× RELATED கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை