×

சாலைப் பணியின் போது வெடிகுண்டு கண்டுபிடிப்பு: அரியானாவில் பதற்றம்

பஞ்ச்குலா: அரியானாவில் சாலைப் பணியின் போது வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர். அரியானா மாநிலம் பஞ்ச்குலா அடுத்த மான்சா தேவி வளாகம் (எம்.டி.சி) பகுதியில் சாலை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. அப்போது அப்பகுதியில் மர்மமான பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அந்த மர்ம பொருள் வெடிகுண்டு கண்டறியப்பட்டது. வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தால், அப்பகுதியினர் பீதியடைந்தனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி சுஷில் குமார் கூறுகையில், ‘பஞ்ச்குலாவின் செக்டார்-6 பகுதியில் சாலை கட்டுமானப் பணிகள் நடைபெற்ற போது, அங்கே ராணுவத்தில் பயன்படுத்தப்படும் பழைய வெடிகுண்டு ஒன்று கண்டறியப்பட்டது. உடனடியாக வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அந்த வெடிகுண்டை செயலிழக்க செய்தனர். இதுகுறித்து இந்திய ராணுவத்திற்கு கடிதம் எழுதியுள்ளோம். ெதாடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றார்.

The post சாலைப் பணியின் போது வெடிகுண்டு கண்டுபிடிப்பு: அரியானாவில் பதற்றம் appeared first on Dinakaran.

Tags : Ariana ,Panchkula ,Haryana ,Mansa Devi… ,Dinakaran ,
× RELATED காஷ்மீர், இமாச்சல், பஞ்சாப், அரியானா...