×

நேபாளத்தில் ஆற்றில் பஸ் கவிழ்ந்து 8 பயணிகள் உயிரிழப்பு: 15 பேர் காயம்

நேபால்: நேபாளத்தில் ஆற்றில் பஸ் கவிழ்ந்து 8 பயணிகள் உயிரிழந்துள்ளனர். 15 பேர் காயமடைந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். காத்மண்டு, நேபாளத்தின் காத்மண்டு நகரில் இருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள பெனி-ஹில்லி மாவட்டத்தில் உள்ள பகுதியை நோக்கி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் காத்மண்டுவில் இருந்து 60 கி.மீ. தொலைவில் தடிங் மாவட்டத்தில் கஜுரி பகுதியருகே சென்றபோது பஸ் அருகேயுள்ள திரிசூலி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் பஸ்சின் ஒரு பகுதி நீரில் மூழ்கியது. இந்த விபத்தில் சிக்கி பயணிகள் 8 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ பகுதிக்கு சென்ற மீட்பு குழுவினர் மற்றும் உள்ளூர்வாசிகள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். உயிரிழந்தவர்களில் 2 பேர் பெண்கள் மற்றும் 6 பேர் ஆண்கள் ஆவர். அவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.

காத்மாண்டுவில் இருந்து இயற்கை எழில் கொஞ்சும் நகரமான பொக்ராவுக்கு சென்று கொண்டிருந்த பேருந்து, தாடிங் மாவட்டத்தில் உள்ள சாலிஸ் என்ற இடத்தில் திரிசூலி ஆற்றில் கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டது. நேபாளத்தின் பாக்மதி மாகாணத்தில் பயணிகள் பேருந்து ஒன்று பிரதான நெடுஞ்சாலையில் இருந்து சறுக்கி வீங்கிய ஆற்றில் விழுந்ததில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 15 பேர் காயமடைந்ததாக தகவல் தெரிவித்துள்ளனர்.

பெரும்பாலும் மலைகளால் சூழப்பட்டிருக்கும் நேபாளத்தில் நெடுஞ்சாலை விபத்துக்கள் பெரும்பாலும் மோசமாகப் பராமரிக்கப்படும் வாகனங்கள் மற்றும் சாலைகளால் ஏற்படுகின்றன.காத்மாண்டுவில் இருந்து இயற்கை எழில் சூழ்ந்த நகரமான பொக்காராவுக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து, மாகாணத்தின் தாடிங் மாவட்டத்தில் உள்ள சாலிஸ் என்ற இடத்தில் உள்ள திரிசூலி ஆற்றில் கவிழ்ந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தில் 8 பேர் பலியாகியுள்ளனர், மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. விபத்துக்குப் பிறகு பேருந்து திரிசூலி ஆற்றில் ஓரளவு மூழ்கியதாகவும், ஆனால் மீட்புப் பணியாளர்கள் பல பயணிகளை இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்க முடிந்தது என்றும் தெரிவித்துள்ளனர். பருவமழை காலத்தில் பெய்த தொடர் மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

The post நேபாளத்தில் ஆற்றில் பஸ் கவிழ்ந்து 8 பயணிகள் உயிரிழப்பு: 15 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Nepal ,
× RELATED சில்லி பாயின்ட்…