×

ஏலகிரி மலையில் அரசு பள்ளி அருகே ஆபத்தான நிலையில் உள்ள மரத்தை அகற்ற கோரிக்கை

ஏலகிரி : ஏலகிரி மலையில் அரசு பள்ளி அருகே ஆபத்தான நிலையில் உள்ள மரத்தை அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் சாலையோரங்களில் பழமை வாய்ந்த மரங்கள் உள்ளது. அதேபோல், பழத்தோட்டம் அரசு மேல்நிலை பள்ளி அருகே மிகவும் பழமை வாய்ந்த மரம் ஆபத்தான நிலையில் சாலையில் சாயும் நிலையில் உள்ளது.
எனவே, சாலையின் வழியாக செல்லும் பள்ளி குழந்தைகளும், வாகனஓட்டிகளும் அச்சத்தோடு பயணிக்கின்றனர்.

இந்தாண்டு மழை பெய்தால் மரம் வேரோடு சாய்ந்து விடும் நிலையில் உள்ளது. எனவே, விபத்து ஏற்படும் முன் மரத்தை அகற்ற வேண்டும். அதே இடத்தில் வேறொரு மரச்செடியை வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஏலகிரி மலையில் அரசு பள்ளி அருகே ஆபத்தான நிலையில் உள்ள மரத்தை அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Govt ,School ,Elagiri Hill ,Elagiri ,Jollarpet ,Govt School ,Dinakaran ,
× RELATED பள்ளிபாளையம் அரசு மகளிர் பள்ளி மாணவிகள் 90% தேர்ச்சி