×

திருநின்றவூர் – நெமிலிச்சேரி ரயில் நிலையங்களுக்கு இடையில் தண்டவாளத்தில் விரிசல்; ரயில்கள் தாமதம்.. பயணிகள் அவதி..!!

திருவள்ளூர்: திருநின்றவூர் – நெமிலிச்சேரி ரயில் நிலையங்களுக்கு இடையில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இன்று காலை 7;30 மணியளவில் திருநின்றவூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் விரிசல் இருப்பதாக கண்டறியப்பட்டது. இதன் காரணமாக தேனி போடிநாயக்கனூர் – சென்னை சென்ட்ரல் ரயில் பாதி வழியில் நிறுத்தி வைக்கப்பட்டது. உடனடியாக ரயில்வே ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு செய்து விரிசலை சரி செய்யும் பணி நடைபெற்று வந்தது.

விரிசல் சரி செய்யப்பட்ட பின் ஒரு மணிநேரம் தாமதமாக ரயில்கள் இயக்கப்பட்டன. தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு சீர் செய்யும் பணி காரணமாக சுமார் 6 விரைவு ரயில்கள் தாமதமாக சென்றது குறிப்பிடத்தக்கது. தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு ரயில்கள் தாமதமாக சென்றதால் ரயில் பயணிகள் கடும் அவதிக்குளாகினர். அதிக அழுத்தம் மற்றும் வெப்பம் காரணமாக உடைந்திருக்கலாம் என ரயில்வே ஊழியர்கள் சந்தேகிக்கின்றனர்.

The post திருநின்றவூர் – நெமிலிச்சேரி ரயில் நிலையங்களுக்கு இடையில் தண்டவாளத்தில் விரிசல்; ரயில்கள் தாமதம்.. பயணிகள் அவதி..!! appeared first on Dinakaran.

Tags : Tiruninavoor ,Nemilicherry ,Tiruvallur ,Tiruninavur ,Tiruninnavur ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...