×

பூவிருந்தவல்லியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விநோதம் : நீட் எதிர்ப்பு பதாகை ஏந்தி புதுமணத் தம்பதி விழிப்புணர்வு

சென்னை: பூவிருந்தவல்லியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நீட் பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வை ஏற்படுத்திய புதுமண தம்பதியர் திருக்குறள் மற்றும் அம்பேத்கர் புத்தகங்களை வழங்கி கவனம் ஈர்த்தனர். பூவிருந்தவல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தை சேர்ந்த வின்சென்ட் என்பவரின் மகன் திருமண வரவேற்பு விமர்சையாக நடைபெற்றது.

வழக்கமாக திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளில் சாத்துக்குடி தின்பண்டங்கள் என ஏதேனும் பொருள் வழங்குவது வழக்கம் ஆனால் இந்த தம்பதியர் தங்கள் திருமணத்திற்கு வரும் விருந்தினர்கள் அறிவு சார்ந்து பயனடைய வேண்டும் என்று விரும்பினர்.

எனவே வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு சட்டமேதை அம்பேத்கரின் புத்தகங்களையும் திருவர்களுக்கு திருக்குறள் தெளிவுரை புத்தகத்தையும் வழங்கினர். மேலும் மணமக்கள் மேடையில் நீட் தேர்வை றது செய்ய கோரி பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். புதுமண தம்பதியின் முயற்சிக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

The post பூவிருந்தவல்லியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விநோதம் : நீட் எதிர்ப்பு பதாகை ஏந்தி புதுமணத் தம்பதி விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Vinotham ,Poovindavalli ,Chennai ,Tirukkural ,Ambedkar ,
× RELATED பூவிருந்தவல்லி அருகே தனியார்...