×

மூதாட்டியிடம் 15 பவுன் அபேஸ்

தர்மபுரி, ஆக.23: தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அருகே எர்ரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனியம்மாள்(65). இவர் நேற்று முன்தினம் மதியம் பென்னாகரம் சாலையில் உள்ள நல்லாம்பட்டியில் நடந்த உறவினரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க புறப்பட்டார். இதற்காக எர்ரப்பட்டியில் இருந்து, பஸ்சில் தர்மபுரி பஸ் ஸ்டாண்டிற்கு வந்தார். அப்போது, தனது பையில் வைத்திருந்த பர்சை பார்த்தபோது, அதனை மர்மநபர்கள் திருடிச்சென்றிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அந்த பர்சில் திருமணத்தில் போட்டுக்கொள்வதற்காக, 15பவுன் நகைகளை பழனியம்மாள் வைத்திருந்தார். பின்னர் இதுகுறித்து டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனியம்மாளிடம் பஸ்சில் வந்த பயணிகள் அவரது பர்சை திருடிச்சென்றனரா? அல்லது பஸ் ஸ்டாண்டில் அவர் இறங்கிய போது, அங்கு சுற்றித்திரிந்த நபர்கள் அவரின் பர்சை திருடினரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து பஸ் ஸ்டாண்டில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

The post மூதாட்டியிடம் 15 பவுன் அபேஸ் appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Palaniammal ,Errapatti ,Athiyamankot ,Dharmapuri district ,Bennagaram ,
× RELATED நவீன கருவி பொருத்திய 200 ஹெல்மேட் விநியோகம்