×

பணியாளர்களுக்கு பயிற்சி முகாம்

 

கீழக்கரை, ஆக.23: ராமநாதபுரம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட பயனாளிகளிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பம் மீது கள ஆய்வு குறித்த பயிற்சி முகாம் கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் நடந்தது. இது தொடர்பாக முதற்கட்ட முகாமில் 336 நியாய விலை கடைகள், இரண்டாம் கட்ட முகாமில் 439 நியாய விலை கடைகளில் ஆக.16 வரை விண்ணப்பம் பெறப்பட்டது. இந்த முகாம்களில் விண்ணப்பிக்க தவறியோருக்கு ஆக.17,18,19ல் சிறப்பு முகாம் நடந்தது.

இதனை தொடர்ந்து விண்ணப்பதாரர்களின் மனுக்கள் மீது ஆய்வு செய்வது குறித்து இல்லம் தேடிக்கல்வி பணியாளர்களுக்கு கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் பயிற்சி முகாம் நடந்தது. தாசில்தார் பழனிக்குமார், மண்டல துணை தாசில்தார் பரமசிவம் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.

The post பணியாளர்களுக்கு பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Tags : Geezalkarai ,Ramanathapuram ,Dinakaran ,
× RELATED ராமநாதபுரத்தில் கலவரம் தடுப்பு குறித்து ‘மாப் ஆபரேஷன்’