×

பல்லாவரம் தொகுதி வளர்ச்சி பணி குறித்து கவுன்சிலர்களுடன் எம்எல்ஏ ஆலோசனை

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி 2வது மண்டல அலுவலகத்தில், பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி தலைமையில் பல்லாவரம் தொகுதியில் உள்ள தாம்பரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள், மண்டல குழு தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் இன்று காலை குரோம்பேட்டையில் நடைபெற்றது. கூட்டத்தில், அந்தந்த வார்டுகளில் பருவமழைக்கு முன் மேற்கொள்ள வேண்டிய பணி, மழைநீர் வடிகால்வாய்கள் அமைத்தல், மழை நீர் கால்வாய்களை தூர்வாருதல், பழுதடைந்த சாலைகள், பூங்கா பராமரித்தல், சாலைகளில் தேங்கியுள்ள குப்பையை அகற்றுதல், சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் ஏற்படும் பிரச்னைகள் போன்ற பல்வேறு பிரச்னைகள் குறித்து மாமன்ற உறுப்பினர்கள் புகார்கள் தெரிவித்து எம்எல்ஏவிடம் மனு அளித்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட எம்எல்ஏ, பொதுமக்கள் புகார்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதில், மண்டலக்குழு தலைவர்கள் இ.ஜோசப் அண்ணாதுரை, வே.கருணாநிதி, மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி துணை ஆணையர் செந்தில் முருகன், உதவி ஆணையர் மாரிச்செல்வி, உதவி செயற்பொறியாளர்கள் பெட்சி ஞானலதா, கோவிந்தராஜ், பிரபாகரன் உட்பட கலந்துகொண்டனர்.

 

The post பல்லாவரம் தொகுதி வளர்ச்சி பணி குறித்து கவுன்சிலர்களுடன் எம்எல்ஏ ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Pallavaram ,Tambaram ,Tambaram Corporation ,Tambaram Municipal Corporation ,MLA ,E. Karunanidhi ,Dinakaran ,
× RELATED தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கத்தில்...