×

குடிமக்கள் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கம்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் மீனாட்சி அம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் சார்பாக நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று நடந்தது. கல்லூரி முதல்வர் முனைவர் ஜி.தனசேகரன் தலைமை தாங்கினார். உத்திரமேரூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் செல்வகுமார், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் கூட்டமைப்பின் காஞ்சி மாவட்ட செயலாளர் ஜெயராமன் முன்னிலை வகித்தனர். குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தின் திட்ட அலுவலர் பரத் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் அமைப்பு கூட்டமைப்பின் தலைவர் வழக்கறிஞர் முருகன், இயக்குனர் அன்புஎத்திராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கருத்தரங்கில் நுகர்வோர் விழிப்புணர்வு என்ற தலைப்பில் நுகர்வோர் உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்து எடுத்துரைத்தார். மேலும் கடைகளில் வாங்கும் பொருட்களில் கலப்படத்தை எவ்வாறு கண்டறிந்து அவற்றை தடுப்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியின் வணிகவியல் துறை தலைவர் தனசேகர் உட்பட கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் உத்திரமேரூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

The post குடிமக்கள் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Tags : Citizen Consumer Awareness Seminar ,Uttara Merur ,Citizens Consumer Forum ,Uttaramerur ,Meenakshi Ammal College of Arts and Sciences ,Citizens Consumer Awareness Seminar ,Dinakaran ,
× RELATED உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்...