×

4 நாள் பயணமாக திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; கட்சியினர் உற்சாகம்..!!

சென்னை: 4 நாள் பயணமாக திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்கிறார். சென்னையில் இருந்து ஆகஸ்ட் 24ம் தேதி காலை 9 மணிக்கு திருச்சி சென்று அங்கிருந்து இரவு நாகை செல்கிறார். திருக்குவளையில் ஆகஸ்ட் 25ல் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். நாகை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்கிறார். முதலமைச்சரின் கள ஆய்வு திட்டத்தின்கீழ் ஆகஸ்ட் 26ம் தேதி 4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்கள், காவல் அதிகாரிகளுடன் ஆகஸ்ட் 26ல் ஆலோசனை மேற்கொள்கிறார். தொடர்ந்து, ஆகஸ்ட் 27ல் திருத்துறைப்பூண்டியில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு சென்னை திரும்புகிறார். இதனிடையே முதலமைச்சர் வருகையை முன்னிட்டு இரு நாட்களுக்கு திருச்சியில் ட்ரோன்கள் பறக்க திருச்சி கலெக்டர் பிரதீப் குமார் தடை விதித்துள்ளார். முதலமைச்சர் வருகையை முன்னிட்டு நாகை, திருவாரூர் மாவட்டங்கள் விழாக்கோலம் பூண்டு வருகிறது. கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர்.

The post 4 நாள் பயணமாக திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; கட்சியினர் உற்சாகம்..!! appeared first on Dinakaran.

Tags : Thiruvarur ,Nagai districts ,Chief Minister ,B.C. ,G.K. stalin ,Chennai ,MCM ,Nagai ,
× RELATED 6,417 மாணவர்கள் புதிதாக சேர்க்கை: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்