×

வாலிபர் கொலை வழக்கு என்னை கொன்றுவிடுவேன் என மிரட்டியதால் தலையை துண்டித்து கொன்றோம்: கைதான சென்னை ரவுடி உட்பட 5 பேர் வாக்குமூலம்

ஊத்துக்கோட்டை:  பெரியபாளையம் அருகே தலை துண்டித்து வாலிபரை கொன்ற வழக்கில், என்னை கொன்று விடுவேன் என அடிக்கடி மிரட்டி வந்ததால், அதற்கு முன் நாம் அவனை போட்டு தள்ள வேண்டும் என நினைத்து தலையை துண்டித்து கொன்றோம் என கைதான தமிழரசு, சென்னை ரவுடி உட்பட 5 பேர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியுள்ளனர். பெரியபாளையம் அருகே செங்காத்தாகுளம் காட்டுப்பகுதியில் கடந்த 6ம் தேதி தலை இல்லாமல் உடல் மட்டும் உள்ள ஆண் சடலம் இருந்துள்ளது. இது குறித்து கிடைத்த தகவலின்பேரில், பெரியபாளையம் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளுர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இறந்த நபர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்றும், அவரை கொலை செய்து தலையை வெட்டி முண்டமாக புதைத்தது யார் என்றும் அந்த உடலின் தலையையும் தேடி கொலையாளிகள் யார் என்பதை அறிய ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சாரதி தலைமையில் 2 தனிப்படை அமைத்து இன்ஸ்பெக்டர்கள் தாரணீஸ்வரி, ஜெயவேல், எஸ்ஐ.பார்த்திபன் குற்றப்பிரிவு ஏட்டுகள் ராவ் பகதூர், செல்வராஜ்,  லோகநாதன், அரி மற்றும் பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில், கடந்த 8ம் தேதி உடல் கிடைத்த இடத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் ஒரு குட்டையில் தலையை கண்டு பிடித்தனர். பின்னர், போலீசார் விசாரணையை தொடங்கினர். அப்போது, சந்தேகத்தின்பேரில் சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த வடமதுரை கிராமத்தில் வசிக்கும் மகேஷ் என்ற புறா மகேஷ் (37) என்ற ரவுடியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அவன் கொலை செய்ததை ஒப்புக்கொண்டான்.  அதன்பேரில் இறந்த நபர் பெயர் சம்பத் (38) என்பது தெரியவந்தது. இது குறித்து மகேஷ், செங்காத்தாகுளம் கிராமத்தை சேர்ந்த தமிழரசு (28), வெங்கடேசன் (35), வெங்கல்குப்பத்தை சேர்ந்த ஆறுமுகம் (28), சின்ன செங்காத்தா குளத்தை சேர்ந்த முத்து (19) ஆகிய 5 பேரை கைது செய்தனர். பின்னர், அவர்கள் அளித்த வாக்கு மூலம் குறித்த போலீசார் கூறும்போது, ‘தமிழரசு என்பவரின் அக்கா கணவர் கடந்த 3 வருடத்திற்கு முன்பு காணாமல் போய் விட்டார்.  அவரை நான்தான் கொலை செய்தேன் என இறந்து போன சம்பத் ஒரு சிலரிடம் கூறியுள்ளார். இதனால், தமிழரசுவிற்கும் சம்பத்திற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சம்பத், தமிழரசை பார்த்து உன்னையும் நான் கொல்லாமல் விடமாட்டேன் என அடிக்கடி கூறியுள்ளார். இதில், சம்பத் என்னை கொன்று விடுவானே என நினைத்தேன். அதற்கு முன் நாம் அவனை போட்டு தள்ள வேண்டும் என தமிழரசு முடிவு செய்துள்ளான். இதில், தமிழரசுக்கு துணையாக சென்னை ரவுடியான மகேஷ் மற்றும் நண்பர்கள் வெங்கடேசன், ஆறுமுகம், முத்து ஆகியோரை அழைத்துக்கொண்டு சம்பத்துக்கு செங்காத்தாகுளம் பகுதியில் மது விருந்து வைத்தனர். இதில், சம்பத்திற்கு போதை தலைகேறியதும் சம்பத்தை படுக்க வைத்து ரவுடி மகேஷ் கழுத்தை அறுத்து விட்டான். அதன்பிறகு அங்கே உடலை மட்டும் புதைத்து விட்டு தலையை 100 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு குட்டையில் போட்டுவிட்டு தப்பிச்சென்று விட்டோம் என கூறியுள்ளனர். பின்னர் 5 பேரையும் கைது செய்த போலீசார் ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் செங்காத்தாகுளம் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.  …

The post வாலிபர் கொலை வழக்கு என்னை கொன்றுவிடுவேன் என மிரட்டியதால் தலையை துண்டித்து கொன்றோம்: கைதான சென்னை ரவுடி உட்பட 5 பேர் வாக்குமூலம் appeared first on Dinakaran.

Tags : Chennai Rowdy ,Poothukkotta ,Periyapalayam ,
× RELATED பெரியபாளையம் பேருந்து நிலையத்தில்...