×

விராலிமலையில் சித்த மருத்துவமனை பார்மசி பணியாளர் தற்கொலை

விராலிமலை,ஆக.22: விராலிமலையை சேர்ந்த அரசு சித்த மருத்துவமனை பார்மசி பணியாளர் கடன் சுமையால் மனம் வருந்தி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். விராலிமலையை சேர்ந்தவர் சேர்வாரன் மகன் முருகேசன் (53). இவர் மணப்பாறை அரசு மருத்துவமனையில் உள்ள சித்த மருத்துவமனை பிரிவில் பார்மசி பணியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவருக்கு கடந்த சிலவருடங்களாக கடன் சுமை அதிகம் இருந்ததாக கூறப்படுகிறது.

இதில் மனமுடைந்த நிலையில் கடந்த சில நாட்களாக இருந்த முருகேசன் கடந்த 16ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த கொசுமருந்து அருந்தி மயங்கி உள்ளார். இதையடுத்து சிகிச்சைக்காக அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்திருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post விராலிமலையில் சித்த மருத்துவமனை பார்மசி பணியாளர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Siddha Hospital ,Viralimalai ,Government Siddha Hospital ,Siddha Hospital Pharmacy ,
× RELATED விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோயில் பூச்சொரிதல் விழா