×

மீனாட்சிபுரம் ரயில்வே கேட் இன்றும் பகலில் மூடல்

நெல்லை, ஆக.22: ரயில்வே கேட் பராமரிப்பு பணிகள் காரணமாக மீனாட்சிபுரம் ரயில்வே கேட் இன்றும் பகல் நேரத்தில் மூடப்படுகிறது. நெல்லை தொடங்கி நாகர்கோவில் வரை இரட்டை ரயில்பாதை பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன. இதையொட்டி தாமிரபரணி ஆற்றுப்பாலம் மற்றும் மேலப்பாளையம் வரையிலான பணி தற்போது வேகமெடுத்துள்ளது. இந்நிலையில் இப்பணிகளுக்காக நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் ரயில்வே கேட் இன்று (22ம் தேதி) காலை 11.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை மூடப்படுகிறது. இவ்வாறு மீனாட்சிபுரத்தில் இன்று பகல்வேளையில் 2 மணி நேரம் ரயில்வே கேட் மூடப்படுவதால், அந்த நேரத்தில் வாகன ஓட்டிகள் மாற்றுப்பாதையை பயன்படுத்துமாறு ரயில்வே கேட்டு கொண்டுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்னரும் மீனாட்சிபுரம் ரயில்வே கேட் பகல்வேளையில் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post மீனாட்சிபுரம் ரயில்வே கேட் இன்றும் பகலில் மூடல் appeared first on Dinakaran.

Tags : Meenakshipuram ,gate ,Nellai ,Nellie… ,Meenakshipuram Railway Gate ,Dinakaran ,
× RELATED வடசேரி, மீனாட்சிபுரம் பஸ் நிலையங்களில் குடிநீர் தொட்டிகள்