×

காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை

தாம்பரம்: சேலையூர் அடுத்த ராஜகீழ்ப்பாக்கம் அண்ணா தெருவை சேர்ந்தவர் விஜய் (27). கட்டிட தொழிலாளியான இவர், ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் விஜய் குடிப்பழகத்திற்கு அடிமையானதால், காதலி இவரை விட்டு பிரிந்துள்ளார். இதில் மன உளைச்சலுக்கு ஆளான விஜய் தினமும் அதிகளவில் மது அருந்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மது போதையில் வீட்டிற்கு வந்த விஜய், எறும்பு ஒழிப்பிற்கு பயன்படுத்தப்படும் டர்பண்ட் ஆயிலை குடித்துவிட்டு, கீழே மயங்கி விழுந்துள்ளார்.

அவரை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், விஜய் இறந்து விட்டதாக தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற சேலையூர் போலீசார், விஜய்யின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Vijay ,Anna Street ,Selaiyur, Rajakeeppakkam ,
× RELATED தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கத்தில்...