×

இரும்புக்கடை உரிமையாளரின் ரூ15 லட்சத்தை பறித்த டிரைவர்

ஆலந்தூர்: கிண்டி மசூதி காலனியைச் சேர்ந்தவர் பீர் மைதீன். இரும்புக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் அதே பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம் (56) என்பவர் கேஷியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 19ம் தேதி மாலை கடையின் வியாபார பணம் ரூ15 லட்சத்தை பீர் மைதீனிடம் கொடுக்க அவரது வீட்டுக்கு சோமசுந்தரம் புறப்பட்டுள்ளார். இதனை நோட்டமிட்ட 3 மர்ம ஆசாமிகள் சோமசுந்தரத்தை வழி வழிமறித்து, அவரை தாக்கி பணப்பையை பிடுங்கிக்கொண்டு தப்பினர்.

போலீசார் விசாரணையில் பீர் மைதீனின் கார் டிரைவரான வெட்டுவாங்கேணி சேர்ந்த முகமது ரசிக் (28) தனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து சோமசுந்தரத்தை தாக்கி ரூ15 லட்சத்தை பறித்துச் சென்றது தெரியவந்தது. அவரை நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post இரும்புக்கடை உரிமையாளரின் ரூ15 லட்சத்தை பறித்த டிரைவர் appeared first on Dinakaran.

Tags : ALANTUR ,Peer Mydeen ,Guindi ,Masjid ,Colony ,Dinakaran ,
× RELATED சென்னை மெட்ரோ பணி காரணமாக 2...