×

தேசிய திறனாய்வு தேர்வு பயிற்சி

 

திருவில்லிபுத்தூர், ஆக.22: தேசிய திறனாய்வு தேர்விற்கு தயாராகும் கிராமப்புற மாணவ, மாணவியருக்கு சிறப்பு பயிற்சி திருவில்லிபுத்தூரில் நடைபெற்றது. தேசிய தேர்விற்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் திருவில்லிபுத்தூரில் தொடக்கக் கல்வித் துறை சார்பில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் பயிற்சி வழங்கப்படும். திருவில்லிபுத்தூர், திரு.வி.க நகர்மன்ற மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் இப்பயிற்சியை வட்டாரக் கல்வி அலுவலர்கள் செல்வலட்சுமி, மலர்கொடி, சீனிவாசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

மாணவர்களுக்கு அறிவியல், கணிதம், சமூகவியல் பாடங்கள் மற்றும் பொது அறிவு குறித்த பயிற்சி வழங்கப்படுகிறது. இப்பயிற்சியில் 78 மாணவ, மாணவியர் கலந்து கொண்டுள்ளனர். நிகழ்ச்சியில் திருவில்லிபுத்தூர் சரகத்தில் உள்ள அனைத்து நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பயிற்சியின் கருத்தாளர்களாக பட்டதாரி ஆசிரியர்கள் அம்பிகா, ஜெயா, மகேஸ்வரி, விஜயலட்சுமி, பாத்திமா ஞானம் ஆகியோர் செயல்பட்டனர்.

 

The post தேசிய திறனாய்வு தேர்வு பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Thiruvilliputhur ,Aptitude Test ,Dinakaran ,
× RELATED முத்துப்பேட்டையில் தொடக்கப்பள்ளி சார்பில் ஐம்பெரும் விழா