×

நடைபயிற்சி சென்ற இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

 

பூந்தமல்லி: வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த 31 வயது பெண், கடந்த 8ம் தேதி வில்லிவாக்கம், மண்ணடி பார்கத் தெருவில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியே பைக்கில் வந்த ஒருவர், இளம்பெண்ணை வழிமறித்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வில்லிவாக்கம் போலீசில் அந்த பெண் புகார் கொடுத்தார். புகாரின்படி போலீசார், அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து விசாரித்தனர். அதில், வில்லிவாக்கம், தாந்தோணி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த குணசேகர் (42) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post நடைபயிற்சி சென்ற இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : Poontamalli ,Villivakkam ,Manadi Bargat ,
× RELATED மதுரவாயல் அருகே பரபரப்பு பழைய விளையாட்டு உபகரணங்கள் கிடங்கில் தீ