
ஆவடி: ஆவடியில் போலீசார் நடத்திய வேட்டையில் 60 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். ஆவடி காவல் ஆணையர் சங்கர் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவின் பேரில் ரவுடிகள் வேட்டை நேற்று நடந்தது. இதற்காக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதில் கொலை, கஞ்சா மற்றும் சரித்திர பதிவேடுகளில் சம்மந்தப்பட்ட 60 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இதில் கொலை குற்றங்களில் சம்மந்தப்பட்டவர்கள் 28 நபர்கள், கொலை முயற்சி வழக்குகளில் 11 பேர், கஞ்சா வழக்குகளில் 1 நபர், பிடியணை குற்றவாளிகள் 1 நபர் மற்றும் இதர முக்கிய வழக்குளில் சம்மந்தப்பட்ட 19 பேர் உள்பட 60 பேரை கைது செய்தனர். ரவுடிகள் மீதான அதிரடி நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என ஆவடி காவல் ஆணையர் கே.சங்கர் ஐபிஎஸ் தெரிவித்துள்ளார்.
The post ஆவடி போலீசார் நடத்திய ரவுடிகள் வேட்டையில் 60 பேர் கைது appeared first on Dinakaran.