×

மனைவி இறந்த சோகத்தில் கதறி அழுத கணவன் பரிதாப பலி

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அடுத்த எடையூர் கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ் (80). இவரது மனைவி தேவகி (75). இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. தேவராஜ், தேவகி தனியாக வசித்து வந்தனர். தேவராஜ், முள்ளங்கி மற்றும் தேங்காய், கீரை, முருங்கை ஆகியவற்றை சைக்கிளில் வைத்து வியாபாரம் செய்துவந்தார். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த மனைவி தேவகி, நேற்று முன்தினம் திடீரென பரிதாபமாக இறந்தார்.

மனைவி இறந்த சோகத்தில் மனைவி உடலைப் பார்த்து தொடர்ந்து கதறி அழுது கொண்டிருந்த தேவராஜ், திடீரென மனைவியின் உடலருகே மயங்கி விழுந்து அவரும் இறந்துபோனார். இதனால், மிகுந்த மன வேதனைக்குள்ளான உறவினர்கள் இருவரது உடல்களையும் அருகருகே வைத்து அஞ்சலி செலுத்தினர். தம்பதியின் உடல்களை அருகருகே வைத்து அடக்கம் செய்தனர். மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவனும் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post மனைவி இறந்த சோகத்தில் கதறி அழுத கணவன் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Thirukkalukkunram ,Devaraj ,Udayoor village ,Devaki ,
× RELATED நாடாளுமன்ற தேர்தல் விதிமுறை எதிரொலி...