×

மெரினா கடலில் ராட்சத அலையில் சிக்கி பள்ளி மாணவன் மாயம்

 

சென்னை: குமரன் காலனி பகுதியைச் சேர்ந்தவர் அருள் (15). அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறான். நண்பர்கள் யோகேஸ்வரன் (14), தர்ஷன் (10) ஆகியோருடன் நேற்று முன்தினம் மாலை, மெரினா கடற்கரைக்கு வந்துள்ளான். அங்கு 3 பேரும் திருவள்ளுவர் சிலை பின்புறம், கடலில் இறங்கி குளித்தனர். அப்போது ராட்சத அலையில் சிக்கினர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு, அங்கு இருந்த கடலோர காவல் படையை சேர்ந்த காவலர்கள் கடலில் இறங்கி தேடினர். இதில், யோகேஸ்வரன் மற்றும் தர்ஷன் ஆகியோரை மீட்டு, கரைக்கு கொண்டு வந்தனர். ஆனால், அலையில் சிக்கிய அருளை மட்டும் மீட்க முடியவில்லை. அவரை தொடர்ந்து காவலர்கள் தேடி வருகின்றனர்.

The post மெரினா கடலில் ராட்சத அலையில் சிக்கி பள்ளி மாணவன் மாயம் appeared first on Dinakaran.

Tags : Marina Sea ,Chennai ,Arul ,Kumaran Colony ,Dinakaran ,
× RELATED இளநீர் லோடுடன் லாரியை திருடி சென்ற நபர் கைது