×

பிலிப்பைன்ஸ் பெண்ணை மணந்த கடலூர் வாலிபர்

கடலூர்: பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணை கடலூர் பட்டதாரி வாலிபர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடலூர் அருகே திருமாணிக்குழி டி.புதுப்பாளையத்தை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன் மகன் பத்மநாபன். எம்பிஏ பட்டதாரியான இவர் சிங்கப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது அங்கு பணியாற்றிய பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ரோனமி டியாங்கோ குவாங்கோ என்ற பெண்ணுடன் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

எனினும் பெற்றோர் சம்மதத்துடன் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளனர். இதையடுத்து இருவருக்கும் நேற்று கடலூர் அருகே வி.காட்டு பாளையத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தமிழ் கலாசார முறைப்படி திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் பத்மநாபனின் உறவினர்கள் மற்றும் ரோனமி டியாங்கோ குவாங்கோவின் உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இதுகுறித்து பத்மநாபன் கூறுகையில், ‘ரோனமியுடன் காதல் ஏற்பட்டதால் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, அவரின் பெற்றோரை சந்தித்து எங்கள் காதல் குறித்து கூறினேன். அவர்கள் உடனே சம்மதம் தெரிவித்துவிட்டனர்’ என்றார். மணப்பெண் ரோனமி டியாங்கோ குவாங்கோ கூறுகையில், ‘எனக்கு தமிழ் கலாசாரம் மிகவும் பிடித்துள்ளது. எங்கள் ஊரில் திருமணங்களை மிக எளிதாக நடத்துவோம். ஆனால் இங்கு இவ்வளவு விமரிசையாக நடப்பதை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது’ என்றார்.

The post பிலிப்பைன்ஸ் பெண்ணை மணந்த கடலூர் வாலிபர் appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Tirumanikuzhi D. Puthupalayam ,
× RELATED சென்னையில் இருந்து இளம்பெண் கடத்தல் தீவிர வாகன சோதனையால் பரபரப்பு