×

ஆவணி மாத முதல் முகூர்த்த நாள்: திருவந்திபுரம் கோயிலில் இன்று 76 திருமணங்கள்

கடலூர்: ஆவணி மாத முதல் முகூர்த்த நாளான இன்று திருவந்திபுரம் தேவநாதசாமி கோயிலில் 76 திருமணங்கள் நடைபெற்றது. கடலூர் அருகே உள்ள திருவந்திபுரத்தில் தேவநாதசாமி கோயில் உள்ளது. 108 வைணவ திருத்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாக இது உள்ளது.

திருப்பதியில் உள்ள வெங்கடாஜலபதிக்கு திருவந்திபுரம் தேவநாதசாமி, அண்ணன் என்பதால் திருப்பதிக்கு வேண்டிக்கொண்டு அங்கு செல்ல இயலாதவர்கள் திருவந்திபுரத்தில் வந்து நேர்த்திக் கடனை செலுத்தலாம் இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த கோயிலில் திருமணம் செய்து கொண்டால் தங்கள் வாழ்க்கை சிறக்கும் என்பதால் ஏராளமானோர் முகூர்த்த நாட்களில் திருமணம் செய்து கொள்வர்.

இந்நிலையில் ஆடி மாதத்தில் திருமணங்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகளை பொதுமக்கள் தவிர்ப்பர். எனவே ஆடி மாதம் முடிந்து ஆவணி மாத முதல் முகூர்த்த நாளான இன்று திருவந்திபுரம் கோயிலில் உள்ள அவுஷதகிரி மலையில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் செய்து கொள்ள ஏராளமான மணமக்கள் தங்கள் உறவினர்களுடன் குவிந்தனர். இதனால் கோயிலை சுற்றிலும் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

மேலும் திருமணம் முடிந்து சாமி தரிசனம் செய்ய சென்ற மணமக்களால் கோயிலிலும் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. முகூர்த்த நாளான இன்று திருவந்திபுரம் தேவநாதசாமி கோயிலில் 76 திருமணங்கள் நடைபெற்றதாக கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் கோயிலை சுற்றியுள்ள திருமண மண்டபங்களிலும் இன்று ஏராளமான திருமணங்கள் நடைபெற்றன. இதனால் திருவந்திபுரம்கோயில், கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியது.

The post ஆவணி மாத முதல் முகூர்த்த நாள்: திருவந்திபுரம் கோயிலில் இன்று 76 திருமணங்கள் appeared first on Dinakaran.

Tags : Avani ,Thiruvanthipuram temple ,Cuddalore ,Thiruvanthipuram Devanathasamy temple ,
× RELATED மோடி அரசு தரும் நெருக்கடி:...