×

கரூர் பகுதியில் குட்கா விற்ற இருவர் மீது வழக்கு

கரூர், ஆக. 20: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை, பசுபதிபாளையம் ஆகிய பகுதிகளில் குட்கா விற்பனை செய்ததாக 2 பேர்கள் மீது வழக்கு பதிந்து அவர்களிடம் இருந்து 200 கிராம் எடையுள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகம் முழுதும் குட்கா விற்பனை செய்யப்படுவது குறித்து கண்காணித்து விற்பனை செய்பவர்கள் மீது வழக்கு பதிந்து, குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.கரூர் மாவட்டம் முழுதும் கடந்த சில மாதங்களாக குட்கா பொருட்கள் விற்பனை குறித்து தீவிரமாக கண்காணித்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படடு வருகிறது.அந்த வகையில், கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை, பசுபதிபாளையம் போலீசார், காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மளிகை கடை மற்றும் டீக்கடை குட்கா பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்ய முயன்றதாக 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.மேலும், இவர்களிடம் இருந்து 200 கிராம் எடையுள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கரூர் பகுதியில் குட்கா விற்ற இருவர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Gutka ,Karur ,Dandonimalai ,Pashupathipalayam ,Karur Corporation ,Dinakaran ,
× RELATED குட்கா பதுக்கி விற்ற கடைக்காரர் கைது