- திருத்துறைப்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளி
- முப்பதாராப்பூண்டி
- திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ரோட்டரி சங்கம்
- சங்கரா கண் மருத்துவமனை கோவை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- திருத்துறைப்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளி
- தின மலர்
திருத்துறைப்பூண்டி, ஆக. 20: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ரோட்டரி சங்கம் மற்றும் சங்கரா கண் மருத்துவமனை கோயம்புத்தூர், தமிழ்நாடு பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் திருத்துறைப்பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்த முகாமிற்கு ரோட்டரி சங்க தலைவர் கணேசன் தலைமை வகித்தார். செயலாளர் சோமசுந்தரம் வரவேற்றார்.
கண் சிகிச்சை முகாம் இயக்குனர் தணிகாசலம் மேற்பார்வையில் நடைபெற்றது. இந்த முகாமில் துணை ஆளுநர் அறிவழகன், பாலசுப்பிரமணியன், முன்னாள் செயலர் அண்ணாதுரை, துரை ராயப்பன், இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சாய் நர்சிங் கல்லூரியை சேர்ந்த ஆசிரியர்களும், மாணவிகள் உதவி செய்தனர். இதில் 278 பேர் கலந்து கொண்டனர். கண் அறுவை சிகிச்சைக்காக சுமார் 62 பேர் தேர்வு செய்யப்பட்டு கோயம்புத்தூர் சங்கரா கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். முடிவில் பொருளாளர் சதாபத்மநாபன் நன்றி கூறினார்.
The post திருத்துறைப்பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் appeared first on Dinakaran.