×

நரிக்குடி அருகே டூவீலர் மீது ஆட்டோ மோதி ஒருவர் பலி

திருச்சுழி, ஆக. 20: நரிக்குடி அருகேயுள்ள டி.கடம்பன்குளம் பகுதியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (52). இவர் டூவீலரில் நரிக்குடி சென்று விட்டு மீண்டும் தனது ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். இருஞ்சிறை ரயில்வே கேட்டை கடந்து சென்ற போது தர்மம் பகுதியிலிருந்து பிடாரிசேரியை சேர்ந்த பெரியசாமி என்பவர் ஓட்டி வந்த ஆட்டோவும், முத்துப்பாண்டி ஓட்டி வந்த டூவீலரும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி கொண்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முத்துப்பாண்டியை அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முத்துப்பாண்டி உயிரிழந்தார். இதுகுறித்து நரிக்குடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நரிக்குடி அருகே டூவீலர் மீது ஆட்டோ மோதி ஒருவர் பலி appeared first on Dinakaran.

Tags : Narikudi ,Thiruchuzhi ,Muthuppandi ,D. Kadampankulam ,Dinakaran ,
× RELATED நரிக்குடி அருகே தொழிலாளியை அரிவாளால்...