×

வணிக வரித்துறை அதிகாரியிடம் செல்போன் பறிப்பு

கோவை, ஆக. 20: கோவை ரேஸ்கோர்ஸ் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவர் மகேந்திரன் (40). இவர், திருப்பூர் வணிகவரித்துறை அலுவலகத்தில் அதிகாரியாக உள்ளார். சம்பவத்தன்று இரவு வேலை முடிந்து கோவை திரும்பினார். பின்னர் தனது வீட்டுக்கு செல்வதற்காக சிஎஸ்ஐ சர்ச் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அவரை பின்தொடர்ந்து பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் திடீரென அவரது செல்போனை பறித்துக்கொண்டு தப்பினர். இதுகுறித்து மகேந்திரன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post வணிக வரித்துறை அதிகாரியிடம் செல்போன் பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Mahendran ,Tamil Nadu Housing Board ,Racecourse ,Tirupur ,Dinakaran ,
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்