மண்டி: இமாச்சலபிரதேசம் நச்சன் தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை சரியாக விநியோகம் செய்யவில்லை என மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக நச்சன் தாசில்தார் அலுவலகத்துக்கு ஒருசில நபர்களுடன் சென்ற பாஜ சட்டமன்ற உறுப்பினர் விநோத் குமார், அங்கு பணியில் இருந்த வருவாய் அதிகாரி தீனா நாத் என்பவரிடம் கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் விநோத் குமார் தீனா நாத் மீது காகிதங்களை கிழித்து வீசி எறிந்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் விநோத் குமார் மீது அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தது, அச்சுறுத்தும் வகையில் பேசியது உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
The post இமாச்சலில் பரபரப்பு அரசு அதிகாரியை மிரட்டிய பாஜ எம்எல்ஏ மீது வழக்கு appeared first on Dinakaran.