×

மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 13,110 கனஅடியாக அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 13,110 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 54.40 அடியாகவும், நீர் இருப்பு 20.696 டி.எம்.சி.யாகவும் உள்ளது.

கர்நாடகாவில் பெய்து வந்த கனமழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி வருகிறது. இந்நிலையில் தற்போது காவிரி கரையோர பகுதிகளில் மழை குறைந்து வருகிறது. இதனால் அங்கிருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது.

நேற்றைய தினம் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 9,938 கன அடியாக இருந்தது. இந்நிலையில் கா்நாடக அணைகளிலிருந்து திறக்கப்பட்ட காவிரி நீா் மேட்டூா் அணைக்கு வரத் தொடங்கியதன் காரணமாக, இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 53.50 அடியிலிருந்து 54.19 அடியாக உயர்ந்தது. மேலும் அணைக்குவரும் நீரின் அளவு வினாடிக்கு 9938 கன அடியிலிருந்து 12,523 கன அடியாக அதிகரித்தது.

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 6,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் 8,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 13,110 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 54.40 அடியாகவும், நீர் இருப்பு 20.696 டி.எம்.சி.யாகவும் உள்ளது.

The post மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 13,110 கனஅடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Mattur Dam ,Salem ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27...