×

டூவீலர்கள் மோதி 4 பேர் படுகாயம்

 

போடி, ஆக. 19: போடி அருகே கோம்பை ஒட்டியுள்ள பல்லவராயன்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் மகன் லோகேஷ் (17). இவரது டூவீலரில் நண்பர் ஹரிரூபேஷ் (17) என்பவருடன் போடி நோக்கி வந்து கொண்டிருந்தனர். ரெங்கநாதபுரத்தில் நுழைந்தபோது இவரது டூவீலர் மீது எதிரே வந்த டூவீலர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.

அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு தேனி க.விலக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லோகேஷ் கொடுத்த புகாரில், போடி தாலுகா போலீசார், போடி ரங்கநாதபுரத்தைச் சேர்ந்த கருப்பையா மகன் சுந்தரேசன் (19), போடி முந்தல் ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்த ரெஜி மகன் விஸ்வா (18) ஆகிய இருவர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

The post டூவீலர்கள் மோதி 4 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Boddy ,Ballamurugan ,Lokesh ,Pallavarayanpatti ,Gomb ,Bodi ,Dinakaran ,
× RELATED ஜெகன்மோகனுக்கு பாடம் புகட்ட வேண்டும்;...