×

வரத்து அதிகரிப்பால் ஒரே நாளில் ₹85 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை ஒடுகத்தூர் ஆட்டுச்சந்தையில்

ஒடுகத்தூர், ஆக.19: ஒடுகத்தூர் ஆட்டுச்சந்தையில் வரத்து அதிகமாக இருந்ததால், நேற்று ஒரே நாளில் ₹85 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது. ஒடுகத்தூர் பேரூராட்சியில் நேற்று வழக்கம்போல் நேற்று ஆட்டுச்சந்தை கூடியது. தற்போது திருவிழா சீசன் என்பதால் காலை முதலே விற்பனைக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து வேன், ஆட்டோ, பைக் போன்ற வாகனங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதனால், வியாபாரிகள் போட்டி போட்டு கொண்டு ஆடுகள் விற்பனை செய்ய தொடங்கினர். காலை முதலே கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததால் போக்குவரத்தும் சற்று பாதிக்கப்பட்டது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘வெள்ளிக்கிழமைகளில் ஒடுகத்தூரில் நடக்கும் ஆட்டுச்சந்தையில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆடுகளை கொண்டு வந்து வியாபாரம் செய்கின்றனர். பண்டிகை நாட்களில் கூட்டம் சற்று அதிகமாகவே காணப்படும். மேலும், ஆடுகள் வரத்து அதிகமாக இருந்ததால் ஒரு ஆடு ₹20 ஆயிரம் முதல் ₹25 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால், இன்று(நேற்று) ஒரே நாளில் மட்டும் ₹85 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது’ என்றனர்.

The post வரத்து அதிகரிப்பால் ஒரே நாளில் ₹85 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை ஒடுகத்தூர் ஆட்டுச்சந்தையில் appeared first on Dinakaran.

Tags : Goats ,Odukathur goat market ,Odugathur ,Odugathur goat ,Dinakaran ,
× RELATED மின்னல் தாக்கி 6 ஆடுகள் பலி