×

தென்காசி மாவட்டத்தில் 8 நாட்கள் 144 தடை உத்தரவு

நெல்லை, ஆக.19: தென்காசி மாவட்டத்தில் ஒண்டிவீரன் 253வது வீரவணக்கம் நிகழ்ச்சி, பூலித்தேவன் 308வது பிறந்தநாளை முன்னிட்டு 8 நாட்கள் 144 தடை உத்தரவு பிறப்பித்து கலெக்டர் துரை ரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே பச்சேரி கிராமத்தில் நாளை 20ம் தேதி நடைபெறும் ஒண்டிவீரன் 252வது வீரவணக்க நிகழ்ச்சி மற்றும் செப்டம்பர் 1ம்தேதி அன்று நெல்கட்டும்செவல் கிராமத்தில் நடைபெறும் பூலித்தேவன் 308வது பிறந்தநாள் நிகழ்ச்சி ஆகியவற்றில் கலந்துகொண்டு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்த உள்ளுர், தென்காசி மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்தும் மற்றும் பிற மாவட்டத்தில் இருந்தும் வருகைத்தரும் பொதுமக்கள் மற்றும் சமுதாய அமைப்புகளை சார்ந்தவர்கள், தென்காசி மாவட்டம் முழுமைக்கும் நேற்று (18ம் தேதி) மாலை 6 மணி முதல் 21.8.2023 காலை 10 மணிவரை மற்றும் 30.8.2023 மாலை 6 மணி முதல் 2.9.2023 காலை 10 மணிவரை குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் இந்நிகழ்வில் அனைவரும் கூட்டமாக செல்லாமல் 4 பேர் வீதம் சென்று மரியாதை செலுத்தி முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தென்காசி மாவட்டத்தில் 8 நாட்கள் 144 தடை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tenkasi District ,Nellai ,Ondiveeran ,veeravanakam ,Pulithevan ,Tenkasi ,Dinakaran ,
× RELATED திருவேங்கடம் அருகே நேற்றிரவு...