×

கல்லூரி மாணவரை கத்தியால் குத்தி கொலைவெறி தாக்குதல்

புதுச்சேரி, ஆக. 19: புதுச்சேரி, தட்டாஞ்சாவடி, ஞானபிரகாசம் நகரைச் சேர்ந்தவர்கள் சதீஷ், ஆகாஷ், மகேந்திரன். நண்பர்களான இவர்கள் தனியார், அரசு கல்லூரியில் உயர்கல்வி பயின்று வருகின்றனர். லாஸ்பேட்டை அரசு நாவலர் நெடுஞ்செழியன் பள்ளியில் பிளஸ்2 பயிலும் இவர்களது நண்பர் ஒருவருக்கும், அதே பள்ளியில் பிளஸ்1 படிக்கும் மாணவருக்கும் ஒருவரையொருவர் முறைத்துக் கொண்டது தொடர்பாக சம்பவத்தன்று கைகலப்பு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பிளஸ்1 மாணவர், தனது கூட்டாளிகளான வானூர் தாலுகா, கோட்டக்குப்பம், கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த திருமலை என்ற சிவகிரி (18), அவரது உறவினரான விஜயகுமார், மதன்குமார் ஆகியோருடன், சம்பந்தப்பட்ட பிளஸ்2 மாணவரை தட்டிக் கேட்பதற்காக புதுச்சேரி, காமராஜர் சாலைக்கு வந்துள்ளார். அப்போது அங்குள்ள பிரபல ஓட்டல் எதிரே இருதரப்பும் கும்பலாக நின்ற நிலையில், பிளஸ்1 தரப்பை பிளஸ்2 மாணவரின் ஆதரவாளர்கள் வழிமறித்து தாக்கி ஓடஓட விரட்டி சதீஷ், ஆகாஷ், மகேந்திரன் ஆகியோர் கத்தி மற்றும் உருட்டுக் கட்டையால் கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதில் திருமலை என்ற சிவகிரிக்கு தலையில் காயம் ஏற்பட்டதோடு வயிற்றில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டது. இதில் ரத்தம் வெளியேறிய நிலையில், அவரை சக நண்பர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மற்ற 2 பேரும் லேசான காயத்துடன் உயிர்தப்பினர். இதுதொடர்பாக ஜாமீனில் வெளிவர முடியாத 5 பிரிவுகளின்கீழ் வழக்குபதிந்த கோரிமேடு போலீசார் குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

The post கல்லூரி மாணவரை கத்தியால் குத்தி கொலைவெறி தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Sadish ,Aakash ,Mahendran ,Tatanjavadi ,Ganaprakasam ,Dinakaran ,
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு