×

பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையம் அருகே தலை துண்டித்த நிலையில் வாலிபர் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை

தண்டையார்பேட்டை: பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையம் அருகே, தலை துண்டித்த நிலையில் வாலிபர் சடலம் கிடப்பதாக, சென்ட்ரல் ரயில்வே போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், சடலமாக கிடந்தது, புளியந்தோப்பு கன்னிகாபுரம் சத்தியவாணி முத்து நகரை சேர்ந்த கீம்சிங் (28) என்பது தெரியவந்தது. இவர், தண்டவாளத்தை கடக்கும்போது ரயில் மோதி இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணமா என ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையம் அருகே தலை துண்டித்த நிலையில் வாலிபர் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Basinbridge railway station ,Thandaiyarpet ,Central Railway Police ,
× RELATED சவுகார்பேட்டையில் ஐபிஎல்...