×

திருமழிசை பேரூராட்சி செயல் அலுவலர், இளநிலை உதவியாளர் பணியிடை நீக்கம்

திருவள்ளூர்: திருமழிசை பேரூராட்சி செயல் அலுவலராக மாலா என்பவரும், இளநிலை உதவியாளராக ஜோசப் என்பவரும் பணிபுரிந்து வந்தனர். இவர்கள் இருவர் மீதும் கட்டிட அனுமதி வழங்கியதிலும், மனைப்பிரிவு அங்கீகாரம் வழங்கியதிலும் பல்வேறு புகார்கள் பேரூராட்சிகளின் இயக்குனருக்கு வந்தன. அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து பேரூராட்சி செயல் அலுவலர் மாலா, இளநிலை உதவியாளர் ஜோசப் ஆகிய இருவரையும் பேரூராட்சிகளின் இயக்குனர் கிரண் குரலா தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்திரவிட்டார். இதனையடுத்து ஊத்துக்கோட்டை செயல் அலுவலராக பணிபுரிந்து வரும் வெங்கடேசன் என்பவர் திருமழிசை பேரூராட்சி (பொறுப்பு) செயல் அலுவலராக பதவி ஏற்றுக் கொண்டார்.

The post திருமழிசை பேரூராட்சி செயல் அலுவலர், இளநிலை உதவியாளர் பணியிடை நீக்கம் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Mala ,Tirumazhisai Municipality ,Joseph ,Tirumazhisai ,Dinakaran ,
× RELATED ஆட்டோவில் பெண் தவறவிட்ட 12 சவரனை...