×

எர்ணாகுளம்-வேளாங்கண்ணி இடையே புதிய விரைவு ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே அறிவிப்பு

சென்னை: எர்ணாகுளம்-வேளாங்கண்ணி இடையே புதிய விரைவு ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே அறிவிப்பு தெரிவித்துள்ளது. எர்ணாகுளத்துக்கு திங்கள், சனிக்கிழமை மற்றும் வேளாங்கண்ணிக்கு செவ்வாய், ஞாயிற்றுக்கிழமையும் ரயில் இயக்கப்படவுள்ளது. எர்ணாகுளத்தில் இருந்து பகல் 12.35 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 5.50 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும் என்று தெரிவித்துள்ளனர். வேளாங்கண்ணியில் இருந்து மாலை 6.30 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் பகல் 12 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post எர்ணாகுளம்-வேளாங்கண்ணி இடையே புதிய விரைவு ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Ernakulam-Agri ,Chennai ,Ernakulam ,Varanganni ,Ernakulum-Agrigandani ,Dinakaran ,
× RELATED எர்ணாகுளம் மாவட்டத்துக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை!