![]()
சென்னை: மீனவர்களுக்கான வீடு கட்டும் திட்டத்தில் 5,035 பேருக்கு வீடுகளுக்கு பட்டா வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.8,000-ஆக உயர்த்தி வழங்கப்படும். 45,000 பேருக்கு மீன்பிடி தொழிலுக்கான கூட்டுறவு கடன் வழங்கப்படும். விசைப்படகுகளுக்கு 18,000 லிட்டர் மானிய டீசல், நாட்டுப்படகுகளுக்கு 4,000 லிட்டர் மானிய டீசல் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
The post மீனவர்களுக்கான வீடு கட்டும் திட்டத்தில் 5,035 பேருக்கு வீடுகளுக்கு பட்டா வழங்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

