×

தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாயில் அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து; சேலம் பெங்களூரு நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு..!!

தருமபுரி: தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாயில் அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. தருமபுரி வழியாக சேலம் நோக்கி கண்டெய்னர் லாரி ஒன்று தொப்பூர் கணவாய் பகுதியில் இரண்டை பாலம் அருகே வேகமாக சென்றுக் கொண்டிருந்தது. அப்போது முன்னாள் சென்று கொண்டிருந்த 3 சிறிய ரக சரக்கு வாகனங்கள் மீது கண்டெய்னர் லாரி தாறுமாறாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தால் முன்னாள் சென்ற 3 வாகனங்களும் அடுத்தடுத்து சாலையில் கவிழ்ந்தது. மேலும் விபத்து ஏற்படுத்திய கண்டைனர் லாரியும் சாலையில் குப்புற கவிழ்ந்தது. வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்டதில் சுமார் 5 பேர் காயமடைந்தனர்.

காலை நேரத்தில் நடந்து முடிந்த இந்த விபத்தால் சேலம் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொப்பூர் கணவாயில் இருந்து 2 புறமும் சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவிற்கு மேல் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சுங்கச்சாவடி ஊழியர்கள், தொப்பூர் போலீசார் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் விபத்து குறித்து தொப்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாயில் அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து; சேலம் பெங்களூரு நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Dharmapuri District Toppur Pass ,Salem Bengaluru highway ,Dharmapuri ,Toppur pass ,Dharmapuri district ,Salem ,Dinakaran ,
× RELATED சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை...