×

ராமேஸ்வரம் அருகே முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் அருகே முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பேக்கரும்பு என்ற இடத்தில் அமைந்துள்ள அப்துல்கலாம் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 2 நாள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளார். நேற்று கட்சி மாநாட்டில் பங்கேற்ற முதலமைச்சர், இன்று மீனவர் நல மாநாடு மற்றும் மீனவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கவுள்ளார்.

இதனிடையே, இராமநாதபுரத்திலிருந்து இராமேஸ்வரம் செல்லும் வழியில், இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் வட்டம், பாம்பன் ஊராட்சி, அக்காள்மடம் மீனவர் குடியிருப்பு பகுதிக்கு நேரில் சென்று, அங்குள்ள மீனவர் குடும்பத்தினருடன் கலந்துரையாடினார். இந்நிலையில், ராமேஸ்வரத்தில் உள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவிடத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு மரியாதை செலுத்தினார்.

முதலமைச்சர் உடன் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, துரைமுருகன், ஐ.பெரியசாமி, ராஜகண்ணப்பன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றுள்ளனர். தொடர்ச்சியாக இன்று காலை 11 மணியளவில் மீனவர்கள் சங்க மாநாட்டில் பங்கேற்று மீனவர்களுக்கான புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிடுகிறார்.

The post ராமேஸ்வரம் அருகே முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Malarduvi ,Republic ,Abdulkalam ,Rameswaram ,G.K. Stalin ,Ramanathapuram ,Maoist Mukhtar Mukhtar Mukhtar ,Abdulkalam Memorial ,Bakarumbu ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...