×

திருவாரூர், பேரளம் பகுதியில் நாளை மின்தடை

திருவாரூர், ஆக. 18: திருவாரூர் மற்றும் பேரளம் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
திருவாரூர் பவித்திரமாணிக்கத்தில் உள்ள 110/33/11 கி.வோ துணை மின்நிலையத்தில் நாளை (19ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் கப்பல் நகர், அடியக்கமங்கலம் மற்றும் கொரடாச்சேரி ஆகிய 33/11 துணை மின்நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் திருவாரூர் நகர், தஞ்சை சாலை, விஜயபுரம், விளமல், கொடிக்கால்பாளையம், மாங்குடி, கூடூர், முகந்தனூர், திருபயத்தாங்குடி, கப்பல் நகர், பிலாவடிமூலை, சிதம்பரநகர், ஆந்தகுடி, அலிவலம், புலிவலம், தப்பாளாம்புலியூர், புதுப்பத்து£ர், நீலப்பாடி, கீழ்வேளூர், கொரடாச்சேரி ஆகிய பகுதிகளிலும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதேபோல் பேரளம் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக பேரளம், கொல்லுமாங்குடி, கொட்டூர், கொல்லாபுரம், பூந்தோட்டம், திருமாளம், கூத்தனூர், அதம்பார், எராவாஞ்சேரி, மருதவஞ்சேரி, கடகம்பாடி, பாகசாலை, விளாகம், வாஞ்சியம், வேலங்குடி, நல்லாடை, காளியாக்குடி, திருகொட்டாரம், பாவட்டக்குடி, கடகம், சிறுபுலியூர் மற்றும் முகந்தனூர் ஆகிய பகுதிகளுக்கும், அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையில் மின்சாரம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

The post திருவாரூர், பேரளம் பகுதியில் நாளை மின்தடை appeared first on Dinakaran.

Tags : Tiruvarur, Peralam ,Tiruvarur ,Thiruvarur ,Peralam ,Thiruvarur, Peralam ,Dinakaran ,
× RELATED திருவாரூர் அருகே பரபரப்பு: பயங்கர...