
திருப்பூர், ஆக.18: நீட் தேர்வை ரத்து செய்யாத ஒன்றிய பாஜ அரசையும், அதற்கு துணை போகும் ஆளுநரையும் கண்டித்து, திமுக இளைஞரணி, மாணவரணி மற்றும் மருத்துவ அணி சார்பில் வருகிற 20ம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் வருகின்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என கட்சி தலைமை அறிவித்துள்ளது. இந்நிலையில், இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் வடக்கு மாவட்ட அலுவலகத்தில், தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான செல்வராஜ் தலைமையில் நேற்று நடந்தது.
இக்கூட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர் நடராசன், தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி. மு.நாகராசன், வடக்கு மாநகர செயலாளர் மேயர் தினேஷ்குமார், இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ், மருத்துவர் அணி அமைப்பாளர் கோபு, மாவட்ட துணை செயலாளர்கள் குமார், டிஜிட்டல் சேகர் மற்றும் இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவர் அணி மாவட்ட, மாநகர, தொகுதி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
The post நீட் தேர்வுக்கு எதிராக 20ல் திமுக உண்ணாவிரத போராட்டம் appeared first on Dinakaran.