×

நடைபாதையில் தூங்கியவர் வாகனம் மோதி உயிரிழப்பு

தண்டையார்பேட்டை: நடைபாதையில் உறங்கியவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானார். எர்ணாவூரை சேர்ந்தவர் நாகராஜ் (55), பெயின்டர். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இவர் தினமும் வண்ணாரப்பேட்டை மின்ட் மேம்பாலத்தில் உள்ள நடைபாதையில் தூங்குவது வழக்கம். அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபாதையில் நாகராஜ் தூங்கியபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயமடைந்தார்.
தகவலறிந்த வண்ணாரப்பேட்டை போக்குவரத்து போலீசார் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாகராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து விபத்துக்கு காரணமான வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நடைபாதையில் தூங்கியவர் வாகனம் மோதி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Thandaiyarpet ,Nagaraj ,Ernavur ,
× RELATED மாநகர பேருந்து படியில் பயணம்; ‘உள்ளே...