×

வி.கே.சகிகலாவால் எனது உயிருக்கு ஆபத்து: ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா போலீசில் புகார்

சென்னை: சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: பூசாரி அரிஹரன் வி.கே.சசிகலா மற்றும் அவர் சார்ந்தவர்களின் தூண்டுதலின் பெயரில் புகார் அளித்துள்ளார். நான் ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசு என்பதால் அவர், சார்பாக அனைத்து கடமைகளும் செய்யும் அதிகாரம் எனக்கு உள்ளது. இனிமேல் போயஸ் தோட்டத்தில் உள்ள பிள்ளையார் சிலையை நாங்கள் பராமரித்து பூஜை செய்து கொள்கிறோம். இதுபோல் என் மீது காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட்டு வரும் வி.கே.சசிகலா மற்றும் அவர்களது உறவினர்களால் எனது உயிருக்கும், உடமைக்கும் ஆபத்து உள்ளது.

மேலும், வி.கே.சசிகலா மற்றும் அவரது உறவினர்களை எனது பாட்டி வீடான வேதா இல்லத்திலோ எங்கள் மற்ற பூர்வீக சொத்துகளிலோ உரிமை கொண்டாட எங்களால் அனுமதிக்க முடியாது. எனவே, வி.கே.சசிகலா மற்றும் அவர் சார்ந்த நபர்களால் எங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளதாக நான் கருதுகிறேன். ஆகவே எனக்கும் எனது கணவருக்கும், குழந்தைக்கும் எங்கள் குடும்பத்திற்கும் உரிய பாதுகாப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

The post வி.கே.சகிகலாவால் எனது உயிருக்கு ஆபத்து: ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா போலீசில் புகார் appeared first on Dinakaran.

Tags : VK Sakikala ,Jayalalithaa ,Deepa ,Chennai ,Thenampet police station ,Priest Ariharan ,
× RELATED ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகளை...