கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசினர் ஆடவர் கலைக்கல்லூரியில் (தன்னாட்சி) ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 16ம் தேதி கழிவறை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை தேவைகளை சரி செய்ய வலியுறுத்தி மாணவர்கள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தின் போது கல்லூரிக்கு வந்த மாணவர்களையும் வலுக்கட்டாயமாக தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபடுத்தினர். இதுகுறித்து கல்லூரி முதல்வர் மாதவி தலைமையில் ஆட்சிமன்ற குழு கூட்டம் நடைபெற்றது. இதில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் குறித்து நிர்வாகத்திற்கு தெரிவிக்காமலும், கல்லூரியின் சுமூகமான சூழலுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் நடந்து கொண்ட 17மாணவர்களை 29ம்தேதி வரை கல்லூரியிலிருந்து இடைநீக்கம் செய்வது என முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.
The post கல்லூரியில் போராட்டம் 17 மாணவர்கள் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.