×

மருந்து கடத்திய பம்மல் ஆசாமிக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: விமானம் மூலம் போதை மாத்திரை, மருந்து கடத்தியவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னையை விமான நிலையத்தில் வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கடந்த 2018 ஜூலை 4ம் தேதி சென்னை விமான நிலையத்தில் சோதனை நடத்தினர். அப்போது, 2 ஆயிரத்து 817 கிராம் எடையுள்ள போதை மாத்திரை, 32 ஆயிரம் லிட்டர் போதை மருந்து ஆகியவை மாத்திரை மற்றும் மருந்து பாட்டில்கள் வடிவில் விமானத்தில் கடத்தப்பட்டது.

இதையடுத்து, சென்னை பம்மல் எல்.ஐ.சி. காலனியைச் சேர்ந்த மணிகண்டன் (41) என்பவரை கைது செய்தனர். அவர் மீது போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜூலியட் புஷ்பா முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் மணிகண்டனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ2 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

The post மருந்து கடத்திய பம்மல் ஆசாமிக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Pammel Asami ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…