×

குமரியில் அண்ணாமலை பிரசார பயணம்; காலையில் வேலைக்கு செல்வோர் மாணவர்கள், பொதுமக்கள் அவதி

நாகர்கோவில்: தமிழக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, என் மண் என் மக்கள் என்ற பிரச்சார பயணத்தை கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 வது நாளாக இன்று காலை பத்மநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட சுவாமியார்மடம் ஜங்ஷனில் இருந்து தொடங்கினார். காலை சுமார் 8 மணிக்கு பிரச்சார பயணம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

அதன்படி காலையில் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி-கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என்று அனைத்து தரப்பினரும் பஸ் நிறுத்தங்களில் பல மணிநேரம் காத்து நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆகவே நீண்ட நேரமாக பஸ் நிறுத்தங்களில் காத்திருந்தும் பஸ்கள் வராததால் விரத்தியடைந்த பலரும் அங்கிருந்து நடந்து செல்ல தொடங்கினர். இன்று சாமியார்மடத்தில் தொடங்கிய பிரச்சார பயணத்திற்கு போதிய அளவில் தொண்டர்கள் கூட்டம் இல்லை. இதனால் காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய பயணம், 10 மணிக்கு தொடங்கியது.

The post குமரியில் அண்ணாமலை பிரசார பயணம்; காலையில் வேலைக்கு செல்வோர் மாணவர்கள், பொதுமக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Annamalai Prasadara ,Kumari ,Nagarko ,President ,Tamil Nadu ,Baja ,Anamalai ,My Soil ,Kannyakumari District ,Kumary ,
× RELATED வெயில் அதிகரித்து வருவதால் கோட்டார்...